திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறிய திருமடல்
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
முள்ளிச் செழுமலரோ தாரான் முளைமதியம்,
கொள்ளிக்கென் உள்ளம் கொதியாமே,-வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி,
மருவாளன் தந்தான் மடல்.
சிறிய திருமடல்
கலிவெண்பா
2673-2712
காரார் வரைக்கொங்கை கண்ணார் கடலுடுக்கை,
சீரார் சுடர்ச்சுட்டிச் செங்கலுழிப் பேராற்று,
1
பேரார மார்வின் பெருமா மழைக்கூந்தல்,
நீரார வேலி நிலமங்கை யென்னும்,இப்
2
பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே-அம்மூன்றும்
ஆராயில் தானே அறம்பொருள் இன்பமென்று,
3
ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார்,
சீரார் இருகலையும் எய்துவர்-சிக்கெனமற்று
4
ஆரானு முண்டென்பார் என்பது தானதுவும்,
ஓராமை யன்றே உலகத்தார் சொல்லுஞ்சொல்,
5
ஓராமை யாமா றதுவுரைக்கேன் கேளாமே,
காரார் புரவியேழ் பூண்ட தனியாழி,
6
தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டுபுக்கு,
ஆரா அமுதமங் கெய்தி-அதினின்றும்
7
வாரா தொழிவதொன் றுண்டே? அதுநிற்க,
ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே?
8
ஏரார் இளமுலையீர்* என்றனக் குற்றதுதான்,
காரார் குழலெடுத்துக் கட்டி-கதிர்முலையை
9
வாரார வீக்கி மணிமே கலைதிருத்தி,
ஆரா ரயில்வேற்கண் அஞ்சனத்தின் நீறணிந்து,
10
சீரார் செழும்பந்து கொண்டடியா நின்றேன்நான்,
நீரார் கமலம்போல் செங்கண்மா லென்றொருவன்,
11
பாரோர்க ளெல்லாம் மகிழப் பறைகறங்க,
சீரார் குடமிரண் டேந்தி-செழுந்தெருவே
12
ஆரா ரெனச்சொல்லி ஆடும் அதுகண்டு,
ஏரார் இளமுலையார் என்னயைரு மெல்லாரும்,
13
'வாராயோ?' என்றார்க்குச் சென்றெனென் வல்வினையால்
காரார் மணிநிறமும் கைவளையும் காணேன்நான்.
14
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன்-அறிவழிந்து
தீரா வுடம்பொடு பேதுறுவேன் கண்டிரங்கி,
15
ஏரார் கிளிக்கிளவி எம்மனைதான் வந்தென்னை,
சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு-செங்குறிஞ்சித்
16
தாரார் நறுமாலைச் சாத்தற்கு, தான்பின்னும்
நேரா தனவொன்று நேர்ந்தாய்-அதனாலும்
17
தீராதென் சிந்தைநோய் தீராதென் பேதுறவு,
வாராது மாமை அதுகண்டு மற்றாங்கே,
18
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்,
'பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல்,
19
ஆரானும் மெய்ப்படுவன்' என்றார்-அதுகேட்டுக்
காரார் குழல்கொண்ட கட்டுவிச்சி கட்டேறி,
20
சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா,
வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவா,
21
'பேரா யிரமுடையான்' என்றாள்-பெயர்த்தேயும்
காரார் திருமேனி காட்டினாள், 'கையதுவும்
22
சீரார் வலம்புரியே' என்றாள்-திருத்துழாய்த்
தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா,
23
நீரேது மஞ்சேல்மின்* நும்மகளை நோய்செய்தான்,
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனைநான்,
24
கூரார்வேற் கண்ணீர் உமக்கறியக் கூறுகெனோ?,
ஆராலிவ் வையம் அடியளப் புண்டதுதான்?,
25
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது?,மற்று
ஆராலே கன்மாரி காத்ததுதான்?-ஆழிநீர்
26
ஆரால் கடைந்திடப் பட்டது? அவன்காண்மின்
ஊரா நிரைமேய்த் துலகெல்லாம் உண்டுமிழ்ந்தும்,
27
ஆராத தன்மையனாய் ஆங்கொருநாள் ஆய்ப்பாடி,
சீரார் கலையல்குல் சீரடிச் செந்துவர்வாய்,
28
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக்கொண்டு,
ஏரார் இடைநோவ எத்தனையோர் போதுமாய்,
29
சீரார் தயிர்சடைந்து வெண்ணெய் திரண்டதனை,
வேரார் நுதல்மடவாள் வேறோர் கலத்திட்டு,
30
நாரார் உறியேற்றி நன்கமைய வைத்ததனை,
பேரார்வேற் கண்மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்,
31
ஓரா தவன்போல் உறங்கி அறிவுற்று,
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி,
32
ஆராத வெண்ணெய் விழுங்கி-அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே,
33
ஓரா தவன்போல் கிடந்தானைக் கண்டவளும்,
வாராத்தான் வைத்தது காணாள்' வயிறடித்திங்கு
34
'ஆரார் புகுதுவார் ஐயர் இவரல்லால்?,
நீரா மிதுசெய்தீர்' என்றோர் நெடுங்கயிற்றால்,
35
ஊரார்க ளெல்லாரும் காண வுரலோடே,
தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப,
36
ஆரா வயிற்றினோ டாற்றாதான்-அன்றியும்
நீரார் நெடுங்கயத்தைச் சென்றலைக்க நின்றுரப்பி,
37
ஓரா யிரம்பணவெங் கோவியல் நாகத்தை,
'வாரா யெனக்ஙெகன்று மற்றதன் மத்தகத்து,
38
சீரார் திருவடியால் பாய்ந்தான்-தன் 'சீதைக்கு
நேராவன்' என்றோர் நிசாசரிதான் வந்தாளை,
39
கூரார்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்,
ஈரா விடுத்தவட்கு மூத்தோனை, வெந்நரகம்
40
சேரா வகையே சிலைகுனித்தான், செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா,
41
ஏரார் தடந்தோள் இராவணனை-ஈரைந்து
சீரார் சிரமறுத்துச் செற்றுகந்த செங்கண்மால்,
42
போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை,
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு-குடல்மாலை
43
சீரார் திருமார்பின் மேல்கட்டி, செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள்கொட்டி,
44
ஆரா எழுந்தான் அரியுருவாய்-அன்றியும்
பேர்வா மனனாய காலத்து, 'மூவடிமண்
45
தாராய் எனக்ஙெகன்று வேண்டிச் சலத்தினால்,
நீரேற் றுலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை-
46
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்,
காரார் வரைநட்டு நாகம் கயிறாக,
47
பேராமல் தாங்கிக் கடைந்தான்-திருத்துழாய்த்
தாரார்ந்த மார்வன் தடமால் வரைபோலும்,
48
போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி,
நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடுங்கையால்,
49
'நாராண ணா*ஓ மணிவண்ணா* நாகணையாய்,
வாராய்என் ஆரிடரை நீக்காய்',-எனவெகுண்டு
50
தீராத சீற்றத்தால் சென்றிரண்டு கூறாக,
ஈ.ரா அதனை இடர்கடிந்தான் எம்பெருமான்,
51
பேரா யிரமுடையான் பேய்ப்பெண்டீர்* நும்மகளை,
தீராநோய் செய்தான்' எனவுரைத்தாள்-சிக்கெனமற்று
52
ஆரானும் அல்லாமை கேட்டெங்கள் அம்மனையும்,
'போரார்வேற் கண்ணீர்* அவனாகில் பூந்துழாய்,
53
தாரா தொழியுமே? தன்னடிச்சி யல்லளே?, மற்று
ஆரானும் அல்லனே' என்றொழிந்தாள்-நானவனைக்
54
காரார் திருமேனி கண்டதுவே காரணமா,
பேராப் பிதற்றாத் திரிதருவன்,-பின்னையும்
55
ஈ.ராப் புகுதலும் இவ்வுடலைத் தண்வாடை,
சோரா மறுக்கும் வகையறியேன்-சூழ்குழலார்
56
ஆரானும் ஏசுவர் என்னும் அதன்பழியை,
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்,
57
'வாராய் மடநெஞ்சே* வந்து-மணிவண்ணன்
சீரார் திருத்துழாய் மாலை நமக்கருளி,
58
தாரான் தருமென் றிரண்டத்தி லொன்றதனை,
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்,
59
ஆராயு மேலும் பணிகேட்ட தன்றெனிலும்,
போரா தொழியாதே போந்திடுநீ' என்றேற்கு,
60
காரார் கடல்வண்ணன் பின்போன நெஞ்சமும்,
வாராதே என்னை மறந்ததுதான்,-வல்வினையேன்
61
ஊரார் உகப்பதே யாயினேன்-மற்றெனக்கிங்
காராய்வார் இல்லை அழல்வாய் மெழுகுபோல்,
62
நீராய் உருகுமென் ஆவி-நெடுங்கண்கள்
ஊரார் உறங்கிலும் தாமுறங்கா, உத்தமன்றன்
63
பேரா யினவே பிதற்றுவன்-பின்னையும்
காரார் கடல்போலும் காமத்த ராயினார்
64
ஆரேபொல் லாமை அறிவார்?,-அதுநிற்க,
ஆரானும் ஆதானும் அல்லள் அவள்காணீர்,
65
வாரார் வனமுலை வாசவ தத்தையென்று,
ஆரானும் சொல்லப் படுவாள், அவளும்தன்
66
பேராயம் எல்லாம் ஒழியப் பெருந்தெருவே,
தாரார் தடந்தோள் தளைக்காலன் பின்போனாள்,
67
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?,-மற்றெனக்கிங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நானவனைக்
68
காரார் திருமேனி காணும் அளவும்போய்,
சீரார் திருவேங் கடமே திருக்கோவல்
69
ஊரே, மதிள்கச்சி ஊரகமே பேரகமே,
பேரா மருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே,
70
பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம்-கணமங்கை
71
காரார் மணிநிறக் கண்ணனு}ர் விண்ணகரம்,
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்,
72
காரார் குடந்தை கடிகை கடல்மல்லை,
ஏரார் பொழில்சூழ் இடவெந்தை நீர்மலை,
73
சீராரும் மாலிருஞ் சோலை-திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை,
74
ஊராய எல்லாம் ஒழியாமே-நானவனை,
ஓரானைக் கொம்பொசித் தோரானை கோள்விடுத்த
75
சீரானை, செங்க ணெடியானைத் தேன்துழாய்த்
தாரானை, தாமரைபோல் கண்ணானை-எண்ணருஞ்சீர்
76
பேரா யிரமும் பிதற்றி,-பெருந்தெருவே
ஊரார் இகழிலும் ஊரா தொழியேன்நான்,
77
வாரார்பூம் பெண்ணை மடல்.
77½
நேரிசை வெண்பா
ஊரா தொழியேன் உலகறிய ஒண்ணுதலீர்*
சீரார் முலைத்தடங்கள் சேரளவும்,-பாரெல்லாம்
அன்றோங்கி நின்றளந்தான் நின்ற திருநறையூர்
மன்றோங்க வூர்வன் மடல்.(*)

(*)இது கம்பர் பாடிய பாடல் என்பர்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com